அரசு பேருந்துகளை இயக்க தற்காலிக ஓட்டுநர் மற்றும் நடத்துநருக்கு தமிழக அரசு அழைப்பு விடுத்திருக்கிறது. அரசு போக்குவரத்து ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருவதால் பேருந்துகள் இயங்காமல் நிற்கின்றன. நிலைமையை சரி செய்ய, உரிமம் பெற்ற ஓட்டுநர்கள் மற்றும் நடத்துநர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அவர்கள் நேரடியாக போக்குவரத்து அதிகாரிகளை சென்று சந்திக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.