பொங்கல் பண்டிகையை ஒட்டி தமிழகத்தில் பணிபுரியும் திருக்கோயில் பணியாளர்களுக்கு கருணைக் கொடையாக ரூ.3000 வழங்கப்படும் என்று அரசு அறிவித்துள்ளது. முழுநேரம், பகுதி நேரம், தொகுப்பூதியம் பெறுவோர், தினக்கூலி என அனைவருக்கும் ரூ.3000 வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. கோயில் பணியாளர்கள் 2022 – 2023 நிதியாண்டில் 240 நாட்கள் பணி செய்திருக்க வேண்டும் என்று நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.