தமிழகத்தில் ஜேஎன்1 என்ற புதிய வகை கொரோனா தொற்று பரவ தொடங்கி விட்டதாக அமைச்சர் சுப்பிரமணியன் அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளார். புதிய வகை கொரோனா உருமாற்றம் அதிக அளவில் கூட்டு பாதிப்பை ஏற்படுத்தவில்லை. பெரிய அச்சத்தை தரும் வகையில் புதிய கொரோனா பரவவில்லை என்றாலும் இணை நோய் உள்ளவர்கள், குழந்தைகள் மற்றும் முதியவர்கள் முக கவசம் அணிய வேண்டும் என அறிவுறுத்தியுள்ளார். மேலும் கொரோனாவால் இரண்டு நாளில் இரண்டு பேர் உயிரிழந்துள்ளது குறிப்பிடத்தக்கது.