தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்யும் சம்பவங்கள் அடிக்கடி அரங்கேறி வருகிறது. அந்த வகையில் தற்போது எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி தமிழக மீனவர்கள் 13 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர்.

அதன்படி புதுக்கோட்டை மாவட்டம் மீன்பிடித் துறைமுகத்திலிருந்து மீன்பிடிக்க சென்ற மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் அனைவரையும் காங்கேசன் துறைமுகத்தில் வைத்து விசாரணை நடத்தியுள்ளனர். மேலும் மீனவர்கள் சென்ற 3 விசை படகுகளையும் பறிமுதல் செய்துள்ளனர்.