தமிழகத்தில் அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிகம் மின்சாரம் செலவு செய்தால் கூடுதல் கட்டணம் வசூலிக்க மின்சார வாரியம் முடிவு செய்துள்ளது. இதற்காக மின்சார வழங்கல் விதிகளில் திருத்தம் செய்ய அனுமதி கோரி மின்சார ஒழுங்குமுறை ஆணையத்திடம் மின்சார வாரியம் விண்ணப்பித்துள்ளது. ஒரு வீட்டுக்கு 5 கிலோ வாட் மின்சாரம் அனுமதிக்கப்பட்டு அதற்கு மேல் பயன்படுத்தினால் கட்டணம் வசூலிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.