தமிழகத்தில் கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி மார்ச் 7-ம் தேதி வரை தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் ஆகிய பகுதிகளில் மழைக்கு வாய்ப்பு உள்ளது. நேற்று தென் மாவட்டங்களில் பரவலாக மழை பெய்த நிலையில் இன்றும் பல்வேறு இடங்களில் மழை பெய்து வருகிறது. அந்த வகையில் தமிழகத்தில் இன்று 18 மாவட்டங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தற்போது வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அதோடு புதுச்சேரி மற்றும் காரைக்கால் ஆகிய பகுதிகளிலும் மழைக்கு வாய்ப்புள்ளது. மேலும் இன்று தமிழகத்தில் விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், தூத்துக்குடி, கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, விருதுநகர், மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, தேனி, மயிலாடுதுறை, புதுக்கோட்டை, ராமநாதபுரம், தஞ்சாவூர், திருவாரூர் மற்றும் நாகப்பட்டினம் ஆகிய 18 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது.