“காங்கிரசின் நலனுக்காக சித்தராமையா முதல்வரானால் என்ன தவறு?” என்று DK.சிவகுமார் கேள்வி எழுப்பியிருக்கிறார். நேற்றுவரை முதல்வர் பதவி கேட்டு போராடி வந்தவர் இன்று இப்படி பேசியிருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருக்கிறது. முதல்வர், துணை முதல்வரை கட்சி தலைமை முடிவு செய்துவிட்டது என்றும் சிவகுமார் கூறியிருக்கிறார். இதனால் காங்கிரஸ் கட்சிக்குள் இருந்த மோதல் முடிவுக்கு வந்துள்ளது.