அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு ஜாமின் வழங்க முதன்மை அமர்வு நீதிபதி அல்லி மறுப்பு தெரிவித்துவிட்டார். அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்ட சில மணி நேரத்திலேயே அமைச்சர் தரப்பில் இருந்து ஜாமின் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதனை விசாரித்த அல்லி, தற்போது மனுவை தள்ளுபடி செய்திருக்கிறார். அதே நேரம் 8 நாட்கள் கஸ்டடியில் வைத்து விசாரிக்க அமலாக்கத் துறைக்கு அனுமதி அளித்திருக்கிறார்.