அமைச்சர் செந்தில் பாலாஜியை 8 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க முதன்மை அமர்வு நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. அமைச்சர் செந்தில் பாலாஜியை காவலில் எடுத்து விசாரிக்க கோரிய அமலாக்கத்துறையின் மனு மீதான விசாரணையில், செந்தில் பாலாஜியை 15 நாட்கள் காவலில் விசாரிக்க அமலாகத்துறை கோரியிருந்தது. எனினும், 8 நாட்கள் (23ம் தேதி வரை) காவலில் வைத்து விசாரணை நடத்த அமலாக்கத்துறைக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.