திமுக எம்பி ஜெகத்ரட்சகன் வீடு,அலுவலகம், கல்வி நிறுவனங்கள், ஹோட்டல், மருத்துவமனைகள் உள்ளிட்ட 40க்கும் மேற்பட்ட இடங்களில் காலையில் இருந்து வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். இதில், கட்டுகட்டாக பல முக்கிய ஆவணங்களை அதிகாரிகள் கைப்பற்றியுள்ளதாக புதிய தகவல் வெளியாகியுள்ளது. செந்தில் பாலாஜி, பொன்முடியை தொடர்ந்து, அடுத்த குறி ஜெகத்ரட்சகனுக்கு வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.