சிக்கிமில் வெள்ளப்பெருக்கில் அடித்துச் செல்லப்பட்ட 23 ராணுவ வீரர்களில் ஒருவர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளார்.
வீரரின் உடல்நிலை சீராக இருப்பதாகவும், உரிய மருத்துவ சிகிச்சை அளிக்கப்படுவதாகவும் ராணுவம் தகவல் தெரிவித்துள்ளது. கனமழையால் தீஸ்தா நதியில் ஏற்பட்ட பெரு வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட மற்ற வீரர்களை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.