விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே மடத்துப்பட்டியில் உள்ள எக்ஸெல் பட்டாசு ஆலையில் இன்று காலை ஏற்பட்ட பயங்கர வெடி விபத்தில், பாண்டி என்ற தொழிலாளி பரிதாபமாக உயிரிழந்தார்.

இந்த கோர விபத்தில் மேலும் 3 தொழிலாளர்கள் படுகாயமடைந்து உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். விபத்து நடந்த நேரத்தில் ஆலையில் ஏராளமான தொழிலாளர்கள் பணியில் இருந்ததால், இடிபாடுகளுக்குள் யாராவது சிக்கியுள்ளனரா என்பதை அறிய தீயணைப்புத் துறையினர் தீவிர மீட்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

“>

 

இந்த விபத்து குறித்து வருவாய் துறை மற்றும் காவல்துறை அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்து விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில், இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.