தமிழக சட்டப்பேரவையில் இருந்து அதிமுக எம்எல்ஏக்கள் வெளிநடப்பு செய்தனர். அப்போது செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் அமைச்சர் வேலுமணி, பென்னிகுவிக் சிலை குறித்த இபிஎஸ் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டுவந்ததை நேரலை செய்யவில்லை என குற்றம்சாட்டியதோடு, மக்கள் பிரச்னை தொடர்பாக எதிர்கட்சி பேசுவதை நேரலை செய்யாததால் வெளிநடப்பு செய்ததாகவும் கூறினார்.