வரும் ஏப்ரல் 12ஆம் தேதி தமிழகம் வருகிறார் காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி.

இந்தியா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து கோவையில் நடைபெறும் பிரம்மாண்ட பொதுக் கூட்டத்தில் ராகுல் காந்தி பங்கேற்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பிரச்சாரக் கூட்டத்தில் முதலமைச்சர் மு.க ஸ்டாலின், ராகுல் காந்தி ஆகியோர் உரையாற்றுகின்றனர்.

கோவை செட்டிபாளையத்தில் ஏப்ரல் 12ஆம் தேதி நடைபெறும் பிரம்மாண்ட பொதுக்கூட்டத்தில் ராகுல் காந்தி, முதல்வர் ஸ்டாலின் இணைந்து பிரச்சாரம் செய்கின்றனர். தமிழகத்தில் ஏப்ரல் 19 ஆம் தேதி மக்களவைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், 12ஆம் தேதி பொதுக்கூட்டத்தில் பங்கேற்க ராகுல் காந்தி தமிழகம் வருகிறார்.