பெண் நிர்வாகியை தாக்கிய வழக்கில் பாஜக நிர்வாகி அமர் பிரசாத் ரெட்டியை பிடிக்க 6 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. பாஜக பெண் நிர்வாகிகளை தாக்கிய வழக்கில் அவர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ள நிலையில், அவர் தலைமறைவானார். இதனையடுத்து அவரை பிடிக்க கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களுக்கு தனிப்படை போலீசார் விரைந்தனர். இந்த வழக்கில் ஜாமீன் கோரி அமர் பிரசாத் மனு தாக்கல் செய்துள்ளார்.