செங்கல்பட்டு அருகே 2 சிறுவர்கள் குளத்தில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பள்ளிகள் இன்று விடுமுறை என்பதால் 8ம் வகுப்பு மாணவர்கள் ஆனந்தன், தேவராஜ் ஆகியோர் நரப்பாக்கம் அருகே குளத்தில் குளித்து விளையாடி மகிழ்ந்துள்ளனர். அப்போது, எதிர்பாராத விதமாக 2 சிறுவர்களும் நீரில் மூழ்கி உயிரிழந்தனர். பெற்றோர்களே, தொடர்ந்து விடுமுறை அறிவிக்கப்படுவதால் குழந்தைகளை கவனமாக பார்த்துக்கொள்ளுங்கள்.