சிவகங்கை மாவட்டம் கீழடியில் உலகத்தரத்தில் அமைக்கப்பட்டுள்ள அகழ் வைப்பகத்தை முதல்வர் மு க ஸ்டாலின் இன்று மாலை 5 மணிக்கு திறந்து வைக்கிறார். பழங்கால பொருட்களை மக்களுக்கு காட்சி படுத்தும் விதமாக இந்த அருங்காட்சியகமானது 2 ஏக்கர் நிலத்தில் ரூ.18.42 கோடி செலவில் கட்டப்பட்டுள்ளது.