தமிழகத்தில் கனமழை காரணமாக இன்று மயிலாடுதுறை மற்றும் கடலூர், புதுச்சேரி பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து தற்போது விழுப்புரம் மற்றும் அரியலூர் ஆகிய மாவட்டங்களில் உள்ள பள்ளி கல்லூரிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 18 மாவட்டங்களில் கன மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ள நிலையில் இன்னும் சில மாவட்டங்களுக்கு விடுமுறை குறித்த அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.