நள்ளிரவு முதல் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலும் கனமழை பெய்து வருவதால் முதல் மாவட்டமாக மதுரை மாவட்டத்திற்கு பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மாணவர்களின் பாதுகாப்பு நலன் கருதி மதுரை மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் சிறப்பு வகுப்புகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் பல மாவட்டங்களிலும் இன்று கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால் விடுமுறை குறித்த அறிவிப்பு அடுத்தடுத்து வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.