மகாராஷ்டிராவில் பிப்.27ம் தேதி மாநிலங்களவை தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில், காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகிய மகாராஷ்டிரா முன்னாள் முதல்வர் அசோக் சவான் நேற்று பாஜகவில் இணைந்தார். தொடர்ந்து, இன்று அவர் பாஜக சார்பில் மகாராஷ்டிராவில் இருந்து மாநிலங்களவைக்கு போட்டியிடுவார் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. நேற்று கட்சியில் இணைந்தவருக்கு இன்று பதவி வழங்கப்படுவது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது