சென்னை பசுமை வழி சாலை இல்லத்தில் ஓ.பன்னீர்செல்வத்தை சசிகலா இன்று நேரில் சந்திக்க உள்ளதாக சற்று முன் தகவல் வெளியாகி உள்ளது. ஓபிஎஸ் தாயார் மறைவை தொடர்ந்து முதல்வர் ஸ்டாலின்,சீமான் மற்றும் அண்ணாமலை உள்ளிட்ட பல்வேறு கட்சி தலைவர்கள் நேரில் சென்று ஆறுதல் தெரிவித்தனர்.

இது போன்ற சசிகலாவும் இன்று ஓபிஎஸ்ஐ சந்திக்கிறார். இருந்தாலும் இந்த சந்திப்பில் அரசியல் ரீதியான காரணமும் இருப்பதாக கூறப்படுகிறது. சமீபத்தில் ஓபிஎஸ் தேவை ஏற்பட்டால் காலத்தின் கட்டாயத்தில் சசிகலா மற்றும் டிடிவி தினகரனுடன் இணைந்து செயல்படுவேன் என கூடியிருந்த நிலையில் தற்போது சசிகலா மற்றும் ஓபிஎஸ் சந்திப்பு மிக முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.