அரசு போக்குவரத்துக் கழகத்திற்கு ஓட்டுநர்கள், நடத்துனர்களை தேர்வு செய்வதற்கான  அரசாணையை  வெளியிட்டுள்ளது தமிழக அரசு. அரசு போக்குவரத்து கழகங்களுக்கு ஓட்டுநர், நடத்துனர் பணிக்கு 812 பேரை தேர்வு செய்ய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. கும்பகோணம் 174, சேலம் 254, கோவை 60, மதுரை 136, நெல்லை 188 என 812 இடங்களுக்கு ஆட்கள் தேர்வு செய்வது குறித்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. தேர்வு மூலமாக பணி நியமனம் செய்ய போக்குவரத்து துறை முடிவு செய்துள்ளது.