அண்ணா 115வது பிறந்தநாளை முன்னிட்டு, காஞ்சிபுரத்தில் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் சற்றுமுன் தொடங்கி வைத்து, 13 பெண்களுக்கு பிரத்யேக ஏடிஎம் கார்டுகளை வழங்கினார். இதனைத் தொடர்ந்து, அனைத்து குடும்ப தலைவிகளின் வங்கிக் கணக்கிலும் ரூ.1000 செலுத்தப்பட்டு வருகிறது. அந்தந்த பகுதிகளில் குடும்ப தலைவிகளுக்கு உரிமைத் தொகைக்கான ஏடிஎம் வழங்கப்படுகிறது.