காலாண்டு விடுமுறைக்கு பின் இன்று 6-12ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டது. இந்நிலையில், கடலூரில் பள்ளி செல்வதற்காக பேருந்து நிலையத்தில் காத்திருந்த 12ம் வகுப்பு மாணவன், முன்விரோதம் காரணமாக கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ளார். பள்ளி செல்வதற்காக பேருந்தில் ஏற முயன்றபோது, மறைந்திருந்த மர்ம கும்பல் மாணவனை விரட்டி விரட்டி, 8 முறை கத்தியால் குத்தி கொலை செய்ததால் பதற்றமான சூழல் நிலவி வருகிறது.