தமிழகத்தில் மிக்ஜாம் புயல் மற்றும் கனமழை வெள்ளத்தில் ஆவணங்களை இழந்தவர்களுக்கு சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் இன்று சிறப்பு முகாம் நடைபெறுகிறது. சென்னையில் மண்டல அலுவலகங்களிலும் பிற மாவட்டங்களில் வருவாய் அலுவலகங்களிலும் நடைபெறும் இந்த சிறப்பு முகாமில் மழை வெள்ள பாதிப்பால் சேதமடைந்த ரேஷன் அட்டை, வாக்காளர் அடையாள அட்டை, ஜாதி மற்றும் பிறப்புச் சான்றிதழ், பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு கல்வி சான்றிதழ்கள் ஆகியவை கட்டணம் இல்லாமல் வழங்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே மக்கள் இந்த அரிய வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளுங்கள்.