அரசு விரைவு பேருந்துகளில் கோயம்பேடு, தாம்பரத்தில் முன்பதிவு செய்த பயணிகள், கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திலிருந்து பயணத்தை மேற்கொள்ளவும், கோயம்பேடு முதல் கிளாம்பாக்கம் வரையிலான கட்டணம் அவரவர் வங்கிக் கணக்கில் திருப்பி செலுத்தப்படும் எனவும் போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது. சென்னையில் இருந்து தென் மாவட்டங்களுக்கு செல்லும் பேருந்துகள், இன்று முதல் கிளாம்பாக்கத்திலிருந்து புறப்படுகிறது.