ஆளுநர் விவகாரம் தொடர்பாக நாளை குடியரசுத் தலைவரை சந்திக்கிறது தமிழக அரசு..

ஆளுநர் விவகாரம் தொடர்பாக குடியரசுத் தலைவரை  தமிழ்நாடு அரசின் பிரதிநிதிகள் நாளை சந்திக்கின்றனர்.
சட்டத்துறை அமைச்சர் ரகுபதி ஆ ராசா என் ஆர் இளங்கோ சந்திக்கின்றனர்.. தமிழ்நாடு சட்டத்துறை அமைச்சர் ரகுபதி திமுக டி.ஆர் பாலு, ஆ ராசா, என்.ஆர் இளங்கோ, வில்சன் ஆகியோர் டெல்லிக்கு சென்று குடியரசுத் தலைவர்  திரௌபதி முர்முவை சந்தித்து மனு வழங்கவுள்ளனர். அரசியல் சாசனத்தை மீறி செயல்படும் ஆளுநருக்கு உரிய அறிவுரைகள் வழங்க வேண்டும் என மனு அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.