பொன்முடிக்கு ஆளுநர் பதவிப்பிரமாணம் செய்து வைக்காத நிலையில் அவருக்கு எதிராக தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது. பொன்முடியை அமைச்சராக்க முதல்வர் ஸ்டாலின் பரிந்துரை செய்திருந்த நிலையில் ஆளுநர் ரவி அதற்கு மறுப்பு தெரிவித்து இருந்தார். பொன்முடிக்கு தண்டனை தான் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது வழக்கிலிருந்து அவர் விடுவிக்கப்படவில்லை என்று கூறி ஆளுநர் மறுப்பு தெரிவித்து இருந்தார்.