ஆந்திர மாநிலத்தில் உள்ள நெல்லூரில் ஏரியை வேடிக்கை பார்ப்பதற்காக மீன்பிடிக்கும் படகில் 6 பேர் சென்றுள்ளனர். அதன்படி பஞ்சுலா பாலாஜி (18), பட்டா ரகு (24), மண்ணூர் கல்யாண் (25), சல்லா பிரசாந்த் (28), பதி சுரேந்திரா (18), அல்லி ஸ்ரீநாத் (18) ஆகியோர் படகில் சென்றுள்ளனர். அப்போது திடீரென படகு நீரில் மூழ்கி 6 பேரும் உயிரிழந்தனர். ‌ இதில் இரண்டு பேரின் உடல் மீட்கப்பட்ட நிலையில் தற்போது 6 பேரின் உடல்களை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.