நாகாலாந்தின் பண்டாரி தொகுதியில் தேசிய மக்கள் முன்னணி ஆதரவாளர், நாகா மக்கள் கட்சி தொண்டர்களை துப்பாக்கியால் சுட்டதால் ஒருவர் படுகாயமடைந்தார். இதனால் அங்கு பதற்றமான சூழல் ஏற்பட, சிறிது நேரம் வாக்குப்பதிவு நிறுத்தப்பட்டது. தொடர்ந்து, போலீசார் நிலைமையை கட்டுக்குள் கொண்டு வந்ததால், மீண்டும் வாக்குப்பதிவு தொடர்கிறது. அதேபோல் அங்கு மற்றொரு வாக்குச்சாவடியில் கல்வீச்சு சம்பவம் நடந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.