ஆதார் என்பது இந்திய குடிமக்களின் தனி அடையாளமாக பார்க்கப்படுகிறது. அனைத்து செயல்பாடுகளுக்குமே ஆதார் முக்கியமான ஒன்றாக உள்ளது. இந்த நிலையில் ஆதார் அடையாள அட்டையில் சேர்ப்பதற்கு, மக்கள் வழங்கும் தரவுகள் மற்றும் தகவல்களை சரி பார்க்கும் அதிகாரத்தை தனியார் நிறுவனங்களுக்கு வழங்கும் விதமாக ஆதார் விதிகளில் மாற்றம் செய்ய மத்திய தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் பரிந்துரை செய்துள்ளது. மக்களுக்கு அரசின் சேவைகள் சென்று சேர்வதை எளிதாக்குவதற்காக இந்த மாற்றம் கொண்டு வரப்பட உள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது