ஜல்லிக்கட்டுக்கு எதிராக பீட்டா உள்ளிட்ட அமைப்புகள் தொடர்ந்த வழக்கில் உச்சநீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பை வழங்கியுள்ளது. ஜல்லிக்கட்டு நடத்த தமிழக அரசு கொண்டுவந்த அவசர சட்டம் செல்லும் என்று நீதிபதிகள் தெரிவித்துள்ளனர். உச்சநீதிமன்ற நீதிபதி கே.எம்.ஜோசப் தலைமையிலான 5 நபர் அமர்வு இந்த தீர்ப்பை வழங்கியுள்ளது.