தமிழகத்தில் ஜூன் 2-ம் தேதி பள்ளிகள் அனைத்தும் திறக்கப்பட இருக்கிறது. முன்னதாக கோடை விடுமுறை நீடிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் பள்ளிகள் திறப்பு தேதி தள்ளி வைக்கப்படும் என்று தகவல்கள் வெளிவந்தது. ஆனால் தமிழக அரசின் பள்ளிக்கல்வித்துறை ஜூன் இரண்டாம் தேதி பள்ளிகள் திறப்பது உறுதி என்று திட்டவட்டமாக அறிவித்துள்ளது.

இந்நிலையில் பள்ளிகள் திறப்பதை முன்னிட்டு தற்போது அரசு ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதாவது கடந்த கல்வி ஆண்டில் வழங்கப்பட்ட பஸ் பாஸ் அல்லது புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டை அல்லது பள்ளி சீருடையுடன் மாணவர்கள் தங்கள் இருப்பிடத்திலிருந்து பள்ளிகள் வரை கட்டணம் இல்லாமல் பயணிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த அறிவிப்பை போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் வெளியிட்டுள்ளார். மேலும் பள்ளிகள் தொடங்கும் நேரம் மற்றும் முடியும் நேரங்களில் பேருந்துகள் சரியாக இயங்குவதை கண்காணிக்க அலுவலர்கள் குழு நியமித்தும் அமைச்சர் சிவசங்கர் உத்தரவிட்டுள்ளார்.