நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலை முன்னிட்டு காங்கிரஸ் கட்சி தேர்தல் அறிக்கையை இன்று வெளியிட்டுள்ளது. அதில் மக்களை கவரும் வகையில் பல அறிவிப்புகள் இடம் பெற்றுள்ள நிலையில், அரசு மற்றும் பொதுத்துறை நிறுவனங்களில் ஒப்பந்த அடிப்படையில் வழங்கப்படும் பணிகள் ரத்து செய்யப்படும் என காங்கிரஸ் உறுதி அளித்துள்ளது. அரசு பணிகள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களில் உள்ள பணிகள் ஒப்பந்த அடிப்படையில் வழங்கப்படும் முறை ரத்து செய்யப்படும். அந்தப் பணி நியமனங்கள் முறைப்படி நடைபெறுவது உறுதி செய்யப்படும் என கூறியுள்ளது.