மக்களவைத் தேர்தலை முன்னிட்டு காங்கிரஸ் கட்சி தனது தேர்தல் அறிக்கையை இன்று வெளியிட்டுள்ளது. அதில் கல்வித்துறை சார்பாக சிறப்பு அறிவிப்புகள் வெளியாகி உள்ளது. அதன்படி நாடு முழுவதும் ஒன்று முதல் 12 ஆம் வகுப்பு வரை கல்வி இலவசமாக வழங்கப்படும் என காங்கிரஸ் கட்சி மிகப்பெரிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

மத்திய அரசு பணிகளில் 30 லட்சம் காலி பணியிடங்களை நிரப்புவோம். ரயில் பயணங்களில் முதியோர்களுக்கான கட்டண சலுகை மீண்டும் வழங்கப்படும், பட்டியலின வகுப்பை சேர்ந்தவர்கள் மீதான துன்புறுத்தலை தடுக்க ரோஹித் வெமுலா சட்டம் கொண்டுவரப்படும் என்று காங்கிரஸ் அறிவித்துள்ளது.