தமிழக அரசு பள்ளி மாணவர்களுடைய நலனிலும், கல்வியிலும் அக்கறை கொண்டு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இந்நிலையில் தமிழ்நாட்டில் உள்ள அரசுப் பள்ளிகளில் மன்ற செயல்பாடுகளின் கீழ் நடைபெறும் போட்டிகளில் மாநில அளவில் வெற்றி பெறும் மாணவர்களை வெளிநாடுகளுக்கு கல்வி சுற்றுலா அழைத்துச் செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.