அமைச்சர் துரைமுருகன் சென்னை அப்போலோ மருத்துவமனையில் மீண்டும் அனுமதிக்கப்பட்டுள்ளார்..

தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் சற்று முன்னதாக சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ தனியார் மருத்துவமனையில் உள் நோயாளியாக அனுமதிக்கப்பட்டுள்ளார். துரைமுருகன் வீட்டிலிருந்த நிலையில், திடீரென ஏற்பட்ட மூச்சுத் திணறல் காரணமாக அங்கிருந்து மருத்துவமனை அழைத்துவரப்பட்டார்.இதையடுத்து  பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவருடைய உடல்நிலை குறித்து முழுவதுமாக கண்காணித்து வரக்கூடிய நிலையில், அவர் உள் நோயாளியாக அனுமதிக்கப்பட வேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்தலின் பேரில் தொடர் மருத்துவ சிகிச்சையில் இருந்து வருகிறார்..

கடந்த மூன்று நாட்களுக்கு முன்னதாக ஏற்பட்ட கடுமையான காய்ச்சல் காரணமாக சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்போலோ தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் நேற்று டிஸ்டார்ஜ் செய்யப்பட்டு வீடு திரும்பிய நிலையில், மீண்டும் இன்று சுமார் ஒரு மணி நேரத்திற்கு முன்னதாக அவருக்கு ஏற்பட்ட மூச்சுத் திணறல் காரணமாக மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளதாக மருத்துமனை வட்டாரம் தகவல் தெரிவித்துள்ளது.