பெண்ணை மிரட்டியதாக எழுந்த புகாரில் அமைச்சர் சேகர்பாபுவின் மருமகன் சதீஷை போலீஸார் கைது செய்துள்ளனர். தன்னை திருமணம் செய்து கொள்வதாக கூறி ஏமாற்றியதாக பெண் ஒருவர் சதீஷ் மீது புகார் அளித்திருந்தார். இந்த வழக்கு விசாரணை நடந்து வரும் நிலையில், சதீஷ் அந்த பெண்ணுக்கு தொடர்ந்து மிரட்டல் விடுத்துள்ளார். இதுகுறித்து பெண் அளித்த புகாரின்படி சதீஷை போலீஸார் கைது செய்தனர்.