அதிமுகவுடன் பாமக கூட்டணி பேச்சு வார்த்தையை தொடங்கியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ஏற்கனவே முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் பாமக நிறுவனர் ராமதாசை சந்தித்திருந்தார். இந்த நிலையில் இபிஎஸ் உடன் ஜிகே மணி சந்தித்து பேசினார். பாஜக கூட்டணியில் பாமக இடம்பெறும் எனக் கூறப்பட்டு வந்த நிலையில், தற்போது அதிமுக உடனும் பேச்சுவார்த்தையை தொடங்கியுள்ளது. எனவே விரைவில் இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.