அகில இந்திய முஸ்லீம் லீக் கட்சியின் தேசியத் தலைவர் சாதிக் பாஷா பாவா, இபிஎஸ்ஸை சந்தித்து தேர்தலில் ஆதரவு தெரிவித்தார். பின்பு பேசிய அவர், அதிமுக உடனான கூட்டணி என்பது ஜெயலலிதா காலம் முதல் எடப்பாடி காலம் வரை தொடர்ந்து வருவதாக கூறினார். மேலும், 2 தொகுதிகளை ஒதுக்கும்படி கேட்டதாகவும், 1 தொகுதியை தருவதாக இபிஎஸ் கூறியதாகவும், எந்த தொகுதியில் போட்டி என்பது விரைவில் முடிவாகும் என்றும் தெரிவித்தார்.