அதானி குழுமம் தொடர்பாக ஹிண்டன்பர்க் வெளியிட்ட அறிக்கையால் ஆறாவது நாளாக அதானி குழுமத்தின் பங்குகள் தொடர்ந்து சரிவை எட்டியுள்ளது. இதன் காரணமாக இந்திய ரிசர்வ் வங்கி அதானி குழுமத்தால் வங்கிகளுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்பு மற்றும் அதானி குழுமத்துக்கு வழங்கப்பட்ட கடன் விவரங்கள் போன்றவற்றை தெரிவிக்க வேண்டும் என ரிசர்வ் வங்கி அனைத்து வங்கிகளுக்கும் உத்தரவு பிறப்பித்துள்ளது.