தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளதால் தமிழக அரசியலில் புதிய பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ராணுவ வீரர் கொலையை கண்டித்து நேற்று மாலை சென்னையில் மெழுகுவர்த்தி ஏந்தி பேரணியாக சென்று பாஜகவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில், அனுமதியின்றி பேரணி நடத்தியதாக கூறி அண்ணாமலை உள்ளிட்ட 3,500 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளனர்.