கடலூர் மாவட்டத்தில் உள்ள சேடப்பாளையம் கிராமத்தில் பிரசாந்த் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சரண்யா என்ற மனைவி உள்ளார். நிறைமாத கர்ப்பிணியான சரண்யாவுக்கு நேற்று காலை பிரசவ வலி ஏற்பட்டது. இதனால் சரண்யாவை உறவினர்கள் ஆம்புலன்ஸ் மூலம் தொண்டமாநத்தம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அழைத்து சென்றனர். அதற்குள் சரண்யாவுக்கு பிரசவ வலி அதிகரித்தது.

இதனால் ஆம்புலன்ஸ் ஓட்டுனர் சரண்ராஜ் வாகனத்தை சாலையோரமாக நிறுத்தினார். இதனையடுத்து அவசர கால நுட்புணர் தசரதன் பிரசவம் பார்த்ததில் சரண்யாவுக்கு அழகான பெண் குழந்தை பிறந்தது. தற்போது தாய், சேய் இருவரும் நலமாக இருக்கின்றனர். அவர்கள் தொண்டமாநத்தம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.