மக்கள் சார்பில் நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்புவது எதிர்க்கட்சியாக எங்கள் கடமை. அதற்கு பதிலளிக்க வேண்டியது பிரதமரின் பொறுப்பு என்று கனிமொழி எம்பி டுவிட் செய்துள்ளார். பாஜக தலைவர்களே, அதானியுடனான உறவு மற்றும் மோசமான நிதி நிலைமைக்கு காரணமான மத்திய அரசின் முடிவு குறித்து நீங்கள் பிரதமரிடம் கேள்வி எழுப்ப வேண்டும். தயவு செய்து இந்த ஒரு முறையாவது தேசத்திற்கு முன்னுரிமை கொடுங்கள் என்று அவர் பதிவிட்டுள்ளார்.