பாஜக பொருளாதார பிரிவு மாநில தலைவராக இருப்பவர் எம் எஸ் ஷா. இவர் மதுரை திருமங்கலத்தில் உள்ள பிரபல தனியார் கல்லூரியின் தலைவராக உள்ளார். இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு, 15 வயது சிறுமியின் தந்தை ஒருவர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்தப் புகாரில் தனது மகளின் செல்போனுக்கு, பாஜக பிரமுகர் எண்ணிலிருந்து ஆபாசமான மெசேஜ்கள் வருகிறது. மகளின் செல்போனை பார்த்ததும் நான் அதிர்ச்சி அடைந்தேன். இதுகுறித்து நான் என் மகளிடம் விசாரித்த போது, எம் எஸ் சார் தனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறினார். அதோடு என் மனைவி என்னுடைய மகளை அடிக்கடி தனியார் சொகுசு விடுதிக்கு அழைத்து சென்று பாஜக பிரமுகர்கள் தனியாக இருந்து வந்துள்ளார்.

அதுமட்டுமின்றி நான் அழைக்கும் இடத்திற்கு வந்தால் புது பைக் வாங்கி தருவதாக கூறி என்னுடைய மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். அதோடு புதிய ஆடைகள் மற்றும் பரிசுப் பொருள்கள் வாங்கிக் கொடுத்து வெளிநாட்டிற்கு அழைத்துச் சென்று உல்லாசமாக இருந்துள்ளார். இவர் உனது கடனை நான் அடைத்து விடுகிறேன் என்று கூறி முதலில் எனது மனைவியோடு திருமணத்தை மீறிய உறவில் இருந்துள்ளார் அதன் பின் எனது மகளிடமும் பாலியல் தொல்லை கொடுத்துள்ளார் இது குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் பாஜக பிரமுகர் எம் எஸ் ஷா மற்றும் மாணவியின் தாய் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் தலைமறைவாக இருந்த எம் எஸ் ஷாவை காவல்துறையினர் கைது செய்தனர்.