பிக் பாஸ் ஏழு நிகழ்ச்சியில் 18 போட்டியாளர்கள் கலந்து கொண்டார்கள். இதில் முதல் நபராக அனன்யா வெளியேற்றப்பட்டார். அதன் பிறகு பவா செல்லத்துறையும் வீட்டில் இருக்க பிடிக்காமல் வெளியேறினார். இரண்டு வீடாக இருக்கும் இந்த நிகழ்ச்சியில் பிரச்சனையும் இரண்டாக இருந்து வருகிறது. இந்நிலையில் பிக்பாஸ் வீட்டில் புதிதாக 5 பேர் வைல்டு கார்ட் என்ட்ரி கொடுத்துள்ளனர்.

28வது நாளான நேற்று, சின்னத்திரை நடிகை வினுஷா மற்றும் யுகேந்திரன் ஆகியோர் போட்டியில் இருந்து வெளியேற்றப்பட்டனர். மேலும், வைல்டு கார்ட் என்ட்ரியாக பாடகர் கானா பாலா, VJ அர்ச்சனா, RJ பிராவோ, நடிகர் தினேஷ், பட்டிமன்ற பேச்சாளர் அன்னபாரதி ஆகியோர் புதிதாக களமிறங்கியுள்ளனர். இதனால் போட்டியாளர்களின் எண்ணிக்கை மீண்டும் 19ஆக மாறியுள்ளது