ஈரோடு மாவட்டத்திலுள்ள திருநீலகண்டர் பகுதியில் வசிக்கும் சிறுமிகள் வீட்டிற்கு வெளியே விளையாடிக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு சுற்று தெரிந்த தெருநாய் ஒன்று குழந்தைகளிடம் வந்தது. இந்நிலையில் திடீரென அங்கு விளையாடிக் கொண்டிருந்த சுபாஷினி(7), சஸ்திகாஶ்ரீ (6), சஞ்சனா(11) மற்றும் பிரித்விகா ஆகிய 4 சிறுமிகளை கடித்தது. இதனை பார்த்த மணிகண்டன் என்பவர் சிறுமிகளை காப்பாற்ற முயற்சி செய்தார். ஆனால் அந்த தெரு நாய் மணிகண்டனையும் கடித்தது.

இதைத்தொடர்ந்து குழந்தைகளின் அலறல் சத்தம் கேட்டு ஓடி வந்த பெற்றோர்கள், நாயை துரத்தி விட்டு சிறுமிகளை மீட்டனர். அதன் பின் சிகிச்சைக்காக அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதுகுறித்து காயமடைந்த சிறுமிகளின் பெற்றோர் கூறியதாவது, பவானி நகரில் அதிக அளவில் தெரு நாய்கள் சுற்றித் திரிகின்றது. இதுகுறித்து பலமுறை நகராட்சி நிர்வாகத்திடம் புகார் தெரிவித்துள்ளோம். ஆனால் தற்போது வரை எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று குற்றம் சாட்டினர்.