
திருச்சியில் திருவெறும்பூர் என்ற பகுதி உள்ளது. அங்கு மத்திய அரசின் பொதுத்துறை பெல் நிறுவனம் உள்ளது. இந்த நிறுவனத்தில் தமிழக மற்றும் வெளிமாநிலத்தைச் சேர்ந்த சுமார் 7000 பேர் பணிபுரிந்து வருகின்றனர். இந்நிலையில் பெல் நிறுவனத்தின் ஒரு பிரிவில் பொது மேலாளராக சண்முகம்(50) என்பவர் வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் இவர் நேற்று வழக்கம்போல் வேலைக்கு வந்திருந்த நிலையில், மாலை வீடு திரும்பவில்லை. இதனால் அவரது உறவினர்கள் பல இடங்களில் அவரைத் தேடினர்.
அப்பொழுது அலுவலகத்தில் உள்ள அவரது அறைக்குச் சென்று பார்த்தபோது, அவருடைய அறை உள்பக்கமாக பூட்டி இருந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த அவர்கள் கதவை உடைத்து உள்ளே சென்ற பார்த்தபோது சண்முகம் கையில் துப்பாக்கியுடன் சோபாவில் உயிரிழந்திருந்தார். உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்படி விரைந்து வந்த காவல்துறையினர் அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இது குறித்து காவல்துறையின தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில் துப்பாக்கிக்கு உரிமம் இல்லை என்பது தெரியவந்துள்ளது.