இந்தியாவின் பொதுத்துறை வங்கியான எஸ்பிஐ வங்கி தன்னுடைய வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு சலுகைகளை அறிவித்து வருகிறது. அதன்படி கடன் திட்டங்களையும், சிறந்த சலுகைகளையும் வழங்கி வருகிறது.  இந்த நிலையில் எஸ்பிஐ வாடிக்கையாளர்கள் உடனே தங்களது பான் கார்டை அப்டேட் செய்திருக்க வேண்டும் என்றும், அப்படி செய்யவில்லை என்றால் வங்கி கணக்கும், யோனோ கணக்கும் பிளாக் செய்யப்படும் என்ற தகவல் வாட்ஸ் ஆப்பில் பரவி வருகிறது.

இந்த செய்தி உண்மையில்லை என்று தற்போது எஸ்பிஐ வங்கி விளக்கம் அளித்துள்ளது. வங்கியில் இருந்து யாராவது அழைப்பதாக கூறி பான் கார்டு தகவல்களை கேட்டால் யாரும் அதனை கொடுக்க வேண்டாம். மேலும் இதுபோன்ற அழைப்பு வந்தால் [email protected] என்ற மெயில் ஐடிக்கு புகார் அளிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளது.