இன்றைய காலகட்டத்தில் தொழில்நுட்ப வளர்ச்சி நாளுக்கு நாள் வளர்ந்து கொண்டே இருக்கிறது. இது ஒரு பக்கம் இருக்க மறுபக்கம் ஆன்லைன் மோசடி சம்பவங்களும் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகின்றன. நாள்தோறும் மோசடிகளை நிகழ்த்த புதிய புதிய உத்திகளை மோசடிதாரர்கள் கையாண்டு வருகிறார்கள். இதனால் ஊதியதாரர்கள், வங்கி வாடிக்கையாளர்கள்,இன்சூரன்ஸ் பயனாளிகள் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்ட பல தரப்பினரும் பணத்தை இழந்து ஏமாந்து விடுகின்றனர்.

இந்நிலையில் எஸ்பிஐ வங்கியில் கணக்கு வைத்திருப்பவர்களுக்கு முக்கியமான எச்சரிக்கை அறிவிப்பு ஒன்று வெளியாகி உள்ளது. ஆன்லைன் மூலம் லோன் கொடுக்கிறேன் என்று சொல்லும் அப்ளிகேஷன்கள் மூலம் பல மோசடிகள் நடைபெறுவதாக எஸ்பிஐ வங்கி தெரிவித்துள்ளது. இதனால் சந்தேகமான அப்ளிகேஷன்களை இன்ஸ்டால் செய்ய வேண்டாம், அந்த அப்ளிகேஷன்கள் உங்கள் தகவல்களை திருடக்கூடும் என்று எஸ் பி ஐ வங்கி வாடிக்கையாளர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது